கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

235 0

கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இரண்டு பேர் கொஹுவல, பெபிலியான பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தங்க நகைகள் உள்ளிட்ட சொத்துக்கள் பலவற்றை கொள்ளையிட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தங்க ஆபரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 வயது மற்றும் 25 வயதுடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment