மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு(காணொளி)

423 0

மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், காலை 10.48 மணியளவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும், மத தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை தியாக தீபம் திலிபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்திலும் தியாக தீபம் திலிபனின் 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் போது சர்வமதத்தலைவர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலிபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment