பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது

285 0

arrest_26வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இறால்மடுவ கிராம சேவையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்த கடும் மழைக்காரணமாக வனாத்தவில்லு பிரதேசத்தின் கிராமங்கள் சில நீரில் மூழ்கியதுடன் இறால்மடுவ கிராமத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

குறித்த பாதிப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட வெள்ள நிவாரணத்தை வழங்குவதற்காகவே கிராம சேவகர் பாலியல் லஞ்சம் கோரியுள்ளார்.

இது குறித்த பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வனாத்தவில்லு காவற்துறையினர் சந்தேககத்துக்குரிய கிராம சேவகரை கைது செய்துள்ளனர்.