ஜனாதிபதி கொலை சதித்திட்டத்திற்கும் ஸ்னைபர் துப்பாக்கிக்கும் பாரிய தொடர்பு- வாசு

721 0

ஸ்னைபர் துப்பாக்கி காணாமல் போயுள்ளமையும் ஜனாதிபதி கொலை சதித்திட்ட வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் சதித்திட்டம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் இதுதொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீது சந்தேகம் எழுகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயேஇவ்வாறுதெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பயங்கரவாத தடுப்புப்பிரிவில் இருந்து தற்போது ஸ்னைபர் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுடுக்கின்றது.

குறித்த துப்பாக்கியானது தூர இலக்குவைப்பதற்காக பயன்டுத்தக்கூடியதாகும். இந்த சம்பவத்துடன் ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பில் நமல் குமார தெரிவித்த கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கையில் சதித்திட்டம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அதனால் பொலிஸார் ஸ்னைபர் துப்பாக்கியை கண்டுபிடிக்கும் வேலையை செய்வதற்கு முன்னர் கொலை சதித்திட்டம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

Leave a comment