வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது

12460 0

வவுனியாவில் இன்று நண்பகல் மத்திய நிலையத்தில் 4 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் ஒள்றில் 4கிலோ 200கிராம் கேரளா கஞ்சாவினை எடுத்துச் சென்ற மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 29வயதுடைய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா போதை ஒழிப்புப்பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment