நாமல் குமார அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு

405 0

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவை நாளை மறுதினம் அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மேற்கொள்ளவிருந்த திட்டங்களை அண்மையில் நாமல் குமார ஊடகங்களிடம் வெளியிட்டிருந்தார்.

அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் நாமல் குமாரவிற்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் ஒலிப்பதிவு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த ஒலிப்பதிவினை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த ஒலிப்பதிவு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நாமல் குமாரவை நாளை மறுதினம் அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒலிப்பதிவு தொடர்பிலான விசாரணைகளின் அறிக்கைகள் எதிர்வரும் வாரத்திற்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற பின்னர் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment