ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெலியத்தைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரைக் கொலை செய்ய டீ.ஐ.ஜி. நாலக டி சில்வா சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ ல.சு.க.யின் முக்கிய அமைச்சர் ஒருவர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.