தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கோவில் கட்டிய போலீஸ்காரர்

328 0

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீதிருந்த அளவு கடந்த அன்பு காரணமாக போலீஸ்காரர் அவருக்கு கோவில் கட்டியுள்ளார். 

நல்கொண்டா மாவட்டம் நிதிமனூரு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு. சாட்டப்பல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் தீவிர ஆதரவாளர். இந்த நிலையில் சந்திரசேகர் ராவ் மீதிருந்த அளவு கடந்த அன்பு காரணமாக அவருக்கு கோவில் கட்ட சீனிவாசலு முடிவு செய்தார்.

இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான நிதிமனூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சந்திரசேகர் ராவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கினார்.

இக்கோவிலை ரூ.2 லட்சம் செலவில் கட்டி முடித்தார். அதில் சந்திரசேகர் ராவின் மார்பளவு சிலையை வைத்துள்ளார். இக்கோவிலை முதல்வர் சந்திரசேகர் ராவ் திறக்க வேண்டும் என்று சீனிவாசலு கோரிக்கை விடுத்து இருந்தார்.

சந்திரசேகர் ராவ் தனது கிராமத்துக்கு வரும்போது கோவிலின் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

Leave a comment