பிள்ளையானுக்கு இன்றும் பிணை இல்லை

302 0

C

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிள்ளையான், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோர் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நீதவான் எம்.கிருஷ்ணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.