ஏறாவூர் இரட்டைக்கொலை-சூத்திரதாரிகளை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

322 0

russia-takes-debt-owed-to-it-by-ukraine-to-intl-court-of-arbitration-in-london-720x480ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் இருவரையும் தொடர்ந்து மேலுமொரு நாள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரட்டைப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கடந்த இரு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.குறித்த இருவரும் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய சந்தேக நபர்களை மேலும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.