அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் கூட்டு எதிர்க் கட்சிக்குள்ளேயே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வேட்பாளராக வருவதே அக்குழுவில் பெரும் பிரச்சினைக்குரியதாகவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சாதாரண உறுப்பினரைக் கூட ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தயாராகவுள்ளது. குடும்ப ஆட்சியினை உருவாக்குவது தமது நோக்கமல்ல எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
சிறிகொதாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.