கைதி­களின் விடு­த­லைக்கான ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கவும் – சிவ­சக்தி ஆனந்தன்

334 0

பல வரு­டங்­க­ளாக விசா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் அனுரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அரசியல் கைதி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்தும் நாளை வவு­னி­யாவில் நடை­பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனை­வ­ரையும் எவ்­வித பேதமின்றி பங்­கேற்குமாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்­துள்ளார்.

இது குறித்து அவர் தெரி­விக்­கையில்,

நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணைகள் இன்றி சிறைச்­சா­லை­களில் எமது உற­வுகள் தமிழ் அர­சியல் கைதிகள் என்னும் பெயர் பல­கை­யுடன் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். பல தட­வைகள் தமது விடுதலையை வலி­யு­றுத்தி போராட்­டங்­க­ளையும் சாகும் வரையிலான உண்ணாவிரதங்களையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் வழங்­கி­வ­ரு­கின்ற போதும், தற்­போது வரையில் அவர்­களின் விடு­தலை என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­களும் காற்றில் பறந்­த­வை­யா­கவே உள்ளது. இந்­நி­லையில் தான் தற்­போது அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையிலுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

சிறையில் நீண்­ட­கா­ல­மாக தமது வாழ்க்கைக் காலத்தை தொலைத்­து­விட்ட நிலையில் எஞ்­சிய காலத்தை தங்­க­ளது உற­வு­க­ளுடன் செல­வி­டு­வ­தற்­கா­கவே விடு­தலைக்கோரிக்­கையை முன்­வைத்­துள்ளனர்.

பொது­மன்­னிப்பு கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்டு வழக்கு விசா­ர­ணை­களும் தாம­த­மாகி வரு­கின்ற நிலையில், ஆகக்­கு­றைந்­தது புனர்­ வாழ்­வ­ளித்­தா­வது தம்மை விடு­தலை செய்­யுங்கள் என்றே அவர்கள் கோரி­வ­ரு­கின்­றனர். இவர்­களின் போராட்டம் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்­கமும் அவர்­க­ளுக்கு முற்றுகொ­டுத்­துக்­கொண்­டி­ருக்கும் தரப்­பி­னர்­களும் பரா­மு­க­மா­கவே இருக்­கின்­றனர்.

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அவர்­க­ளுக்கு பலம் சேர்க்கும் வரை­யிலும் வாக்­கு­று­தி­களை மறந்தும் தமிழ் மக்­களை ஏமாற்ற நினைக்கும் அத்­தனை அர­சியல் சக்­தி­க­ளுக்கு அழுத்­தங்­களை வழங்கும் முக­மா­கவும் நாளை சனிக்­கி­ழமை வவு­னியா மாவட்ட செய­ல­கத்­திற்கு முன்­பாக இடம்­பெ­ற­வுள்ள கண்ட ஆர்ப்­பாட்­டத்­திற்கு பூரண ஆத­ரவை நல்குவதுடன் அனைவரையும் எந்த வித பேதங்களுமின்றி பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

சிறையில் வாடும் எமது அத்தனை உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஜனநாயக கடமையை அனைத்து தரப்பினரும் ஏற்று அணிதிரளுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Leave a comment