யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

4985 0

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நவநீதராசா வரதன் வயது 23 என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment