இலங்கை பொலிஸ் வரலாற்றை அவமானப்படுத்தும் தற்போதைய பொலிஸ்மா அதிபர் -அநுர

301 0

இலங்கை பொலிஸ் வரலாற்றை அவமானப்படுத்தும் விதமாக தற்போதைய பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சிறு பிள்ளைத்தனமாக செயற்படும் காரணத்தால் அவரின் தலைமையின் கீழ் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் சிக்கல் நிலவுவதாகவும் அந்த விசாரணைகளின் நம்பிக்கை தன்மை தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று (19) கண்டி மல்வத்து தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தொடர்பில் முடிவு ஒன்றை முன்வைக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment