நாடு திரும்பினார் முப்படைகளின் பிரதானி

286 0

சி.ஜ.டி விசாரணையை எதிர்கொண்டிருந்த வேளையில் மெக்சிக்கோவிற்கு கடந்த வாரம் சென்றதன் மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்திய முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ன நாடு திரும்பியுள்ளார்.

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் நபரிற்கு அடைக்கலம் கொடுத்தார் என முப்படைகளின் பிரதானி சி.ஐ.டி.யினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெறுவதற்காக அவரிற்கு சி.ஐ.டி.யினர் அழைப்பு விடுத்திருந்த வேளை அவர் மெக்சிக்கோ சென்றமை பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் முப்படைகளின் பிரதானியை கைதுசெய்வது தொடர்பாக அரசாங்கத்திற்குள் இரு வேறு கருத்துக்கள் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே முப்படைகளின் பிரதானி நாடு திரும்பியுள்ளார்.

Leave a comment