விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை-சபாநாயகர்

229 0

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சபாயாகரான நீங்கள் இந்த சபைக்கு அறிவித்திருந்தீர்கள். அதன்படி சட்ட மா அதிபரினால் அது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதா? அது வழங்கப்பட்டிருந்தால் அது என்ன? அவ்வாறு வழங்கப்படாவிட்டால் அதனை எப்போது பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள்? என சபாநாயகரிடம் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர் சட்டமா அதிபர் தேவையான நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது வழக்கு தொடரவும் நடவடிக்கையெடுத்துள்ளார் என தெரிவித்தார்.

Leave a comment