பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படாது – ஐ.தே.க

222 0

எரிபொருள் விலை அதிகரிப்பதனால் பஸ்கட்டணங்களை ஒருபோதும் அதிகரிக்கப்போவதில்லை. பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லையிலேயே பஸ்கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

அத்தோடு உலகச்சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடையும் போது அதற்கேற்ற மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

மேலும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து கோதுமை மா மற்றும் கோது மா சார்ந்த உற்பத்திகளின் விலையும் அதிகரித்துள்ளது.

அவற்றினை விலை அதிகரிப்பிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தாவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

அதில் கலந்துக்கொண்டு எரிப்பொருள் விலை அதிகரிப்பினால் ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment