ஹெரோயின் கடத்திய மூவர் கைது

285 0

ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து அம்பாறை சென்ற தனியாருக்குச் சொந்தமான குளிரூட்டப்பட்ட பஸ் வண்டியில் மலவாயிலில் மறைத்து ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும், தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணியளவில் காரைதீவு பிரதேசத்தில் வைத்து பஸ்ஸை நிறுத்தி பரிசோதனை செய்த போது, மூன்று நபர்களும் மலவாயிலில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்த நிலையில் ஹெரோயின் போதைப் பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இததையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை சோதனைக்குட்படுத்தியபோது ஒருவரிடம் 04 கிராம் 110 மில்லிகிராமும், இரண்டாவது நபரிடம் 03 கிராம் 36 மில்லிகிராமும், மூன்றாவது நபரிடம் 845 மில்லிகிராமும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் நேற்று ஆஜர் செய்த போது மூன்று நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை  செய்வதற்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

Leave a comment