பஸ் கட்டண இறுதித் தீர்மானம் எடுப்பது அமைச்சரவையில்- நிமல்

255 0

தனியார் பஸ் சங்கங்கள் என்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் அமைச்சரவையிலேயே எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்காவிடின் எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனம் இன்று (17) அறிவித்திருந்தது.

இது குறித்து இன்று மாலை கருத்துத் தெரிவிக்கையிலேயே போக்குவரத்து அமைச்சர் இதனைக் கூறினார்.

தற்பொழுது பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. எத்தனை ரூபாவினால் கட்டண அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் அமைச்சரவைக்கு பிரேரணை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் புதன்கிழமை போக்குவரத்து அமைச்சில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment