ஹெச்.ராஜாவின் வாதம் சரி; வார்த்தையில் ஒப்புதல் இல்லை: தமிழிசை மழுப்பல்

297 0

ஹெச்.ராஜா நீதிமன்றத்தையும், போலீஸாரையும் அவமதித்தது குறித்த கேள்விக்கு தமிழிசை மழுப்பலாகப் பதிலளித்தார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை புரசைவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பாஜகவினர் கொண்டாடினர். இதில் கலந்துகொண்ட தமிழிசையிடம் ஹெச்.ராஜாவின் அவதூறு பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:

“ஹெச்.ராஜா என்னுடைய குரல் இல்லை என மறுத்திருக்கிறார். அவரின் அந்தக் கருத்தையும் நாம் பதிவு செய்ய வேண்டும். அதனால் அதில் உண்மை என்ன என்று தெரிந்துவிட்டு நான் பேசுகிறேன். அவரது வீடியோவை வைத்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். ஆனால், ஒரு தலைவர் தனது கருத்தை சொல்வதற்கும் வழிவகை கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஏனென்றால் அவர் அதை மறுத்திருக்கிறார்.

அதில் உண்மைத் தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கும், அதை அவர் உணர்த்துவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். அதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து.”

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

மற்றொரு இடத்தில் “பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா போலீஸாருடன் வாதம் செய்தது சரி என்றும், ஆனால் அவர் கூறிய வார்த்தையில் தமக்கு ஒப்புதல் இல்லை” என்றும் தெரிவித்தார்

Leave a comment