மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டதால் நாளை போராட்டம்

3779 0

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதனால், கடற்றொழில் திணைகளத்திற்கு முன்பாக நாளை, வாயில் கறுப்புத் துணியின கட்டி மீனவர்கள் அமைதி எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் 2 ஆம் திகதி அப் பகதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை கண்டித்து மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முல்லைத்தீவு செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலையடுத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவில் மேற்கொள்ள முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக சட்டவிரோத சுருக்கு வலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன.

ஆகவே மீனவர்களுக்கு வாங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டியே நாளைய தினம் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்திற்க முன்பாக வாயில் கறுப்புத் துணி கட்டி அமைதி எதிர்பபு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

Leave a comment