செல்வகந்த தோட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்பு

244 0

பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (14) காலை 07மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்ததாகவும் அதிகாலை அவருடைய மனைவி பார்கும் பொழுது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டவர் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீதரன் ராஜீவ் என்பவரே சடலமாக மீட்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment