மீண்டுமொரு சிறிசேன உருவாகலாம் என்கிறார் வெல்கம !

238 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ராஜபக்ஷ் குடும்பத்துக்கு மாத்திரம் சொந்தமாக்கிக்கொள்ள இடமளிக்க முடியாது.

ஜனாதிபதி வேட்பாளருக்கு கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதைவிடுத்து தனது சகோதரர் வேட்பாளராகலாம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதை வண்மையாக கண்டிக்கின்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோரர் ஒருவர் நியமிக்கப்படலாம் என அந்நாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

எமது கட்சியில் ஆரம்பம் முதல் வேறுகட்சி உறுப்பினர்கள் இணைந்து செயற்படுகின்றனர். அவர்களில் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இருக்கின்றனர். ஆனால் தற்போது தெரிவிக்கப்படுபவருக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லை. அவர் குறைந்த பட்சம் பிரதேசசபையில் கூட இருந்ததில்லை. அதனால் குடும்ப ஆட்சிக்கு வழியமைப்பதானது எதிர்காலத்தில் மீண்டுமொரு சிறிசேனவை உருவாக்குவதற்கு தயாராகும் நிலையாகும். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.

Leave a comment