புகையிரதத்துக்கு மோதிய சிறுவன் பலி

198 0

அங்குலானை பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி 08 வயது சிறிவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

அங்குலானை, சயுரபுர மாடி வீட்டுத் தொகுதிக்கு முன்னால் உள்ள புகையிரத வீதிக்கு குறுக்கால் சென்ற குறித்த சிறுவன் மருதனையில் இருந்து ஹிக்கடுவ நோக்கி சென்ற புகையிரதத்திற்கு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதத்துடன் மோதியதில் பாரிய காயமடைந்த சிறுவன் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான்.

நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a comment