ஒலுவில் பிரதேச மீனவர்களின் கோரிக்கைக்கு தீர்வு-விஜித் விஜ­ய­முனி சொய்சா

289 0

ஒலுவில் மீன்­பிடித் துறை­முக நுழை­வாயில் பிர­தே­சத்தில் நிரம்­பி­யுள்ள மண்ணை அகற்­று­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை விரைந்து முன்­னெ­டுப்­ப­தாக கடற்­றொழில், நீரியல் வள அபி­வி­ருத்தி மற்றும் கிரா­மியப் பொரு­ளா­தார அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா பிரதி அமைச்சர் ஹரீ­ஸிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

 

ஒலுவில் மீன்­பிடித் துறை­மு­கத்தில் இயந்­திரப் பட­குகள் செல்லும் பாதையில் மண் நிரம்­பி­யுள்­ளதால் மீன­வர்கள் கட­லுக்குச் செல்ல முடி­யாமல் மீன்­பிடித் தொழில் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக மீனவ சங்­கங்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபி­வி­ருத்தி பிரதி அமைச்­ச­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரீஸின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்­ததைத் தொடர்ந்து கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்­சாவை அமைச்சு அலு­வ­ல­கத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் சந்­தித்து அம்­பாறை மாவட்ட மீன­வர்கள் எதிர்­நோக்கும் குறித்த பிரச்­சினை தொடர்பில் தெளி­வு­ப­டுத்திக் கூறி­ய­போது மேற்­படி உறு­தி­மொ­ழி­யை வழங்­கி­யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment