யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு (காணொளி)

18683 0

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை ரயில் நிலையத்து அருகாமையில், இன்று காலை அடையாளம் காணப்பட்ட மண்டையோடு தொடர்பில், மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள, ஊழியர்கள் தங்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில், மனித எலும்புக்கூடு ஒன்று இருப்பதாக, காங்கேசந்துறை பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நீதிவானின் வருகைக்காக காத்திருந்தனர்.

இதன் போது, குறித்த இடத்திற்கு சென்ற, மல்லாகம் நீதிமன்ற நீதிவான், மனித எலும்புக்கூடுகளை பார்வையிட்டதுடன், பொலிஸாரிடம் கேட்டறிந்து கொண்டார்.

Leave a comment