கிணற்றில் விழுந்ததில் அங்கவீன சிறுவன் பலி

276 0

வெலிகந்த, மஹசென்புர பகுதியில் கிணற்றில் விழுந்து 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வெலிகந்த, மஹசென்புர பகுதியை சேர்ந்த கே.ஏ நிசான் பிரமோத் எனும் அங்கவீனமான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவனுக்கு வாய்பேசவே சுயநினைவே இல்லாத காரணத்தினால் அவன் எப்போதும் வீட்டில் உள்ள அறை ஒன்றில் கட்டி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த சிறுவன் தன்னுடைய வீட்டில் முன்னால் இருக்கும் கிணற்றில் விழுந்தே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 4 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டில் இல்லை என தேடும் போதே கிணற்றில் இருந்ுத சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

20 அடி ஆழமான கிணற்றில் 12 அடிக்கு நீர் நிரம்பி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment