விச பால் பக்கெட் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு – பொலிஸ்

269 0

கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தவர்களுக்கு இனந்தெரியாதோரினால் வழங்கப்பட்ட விசம் கலந்ததாக கூறப்படும் பால் பக்கெட் பரிசோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்புக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களினால் வாக்கு மூலம் வழங்கும் போது பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பால் பக்கெட்டே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விச பால் பக்கெட் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

Leave a comment