மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலிய செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது

267 0

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் மாலைதீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை நேற்று திங்கட்கிழமை, அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a comment