ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இன்று 10 ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி  வரை  நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது பல்­வேறு நாடு­களின் மனித உரிமை  விவ­கா­ரங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளதுடன் நூற்­றுக்­க­ணக்­கான அறிக்­கைகள் நாடுகள் தொடர்பில்   தாக்கல் செய்­யப்­ப­ட­வுமுள்­ளன.

இன்­றைய  முத­லா­வது  அமர்வில்  உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் மைக்கேல் பசேல் ஜெரியா இலங்­கையின் நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் பிரஸ்­தா­பிப்பார் என்­ப­துடன் தாமதம் தொடர்பில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.