அலி ரொஷான் பிணையில் விடுதலை

208 0

போலியான ஆவணங்களை பயன்படுத்தி யானையொன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அலி ரொஷான் என்ற நிராஜ் ரொஷான் உள்ளிட்ட மூன்று பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் கெஸ்பேவ நீதவான் ருசிர வெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணையிலும், தலா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

Leave a comment