கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு

233 0

மன்னார் பிரதேச கடலில் மிதந்து கொண்டிருந்த கேரளா கஞ்சா அடங்கிய பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் 07 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் 284 கிலோ கிராம் கேரளா கஞ்சா இருந்துள்ளது.

குறித்த பொதிகளின் சொந்தக்காரர் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.

முலங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

Leave a comment