சமுர்த்தி அதிகாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம்- பி.ஹரிசன்

238 0

அனைத்து சமுர்த்தி அதிகாரிகளுக்கும் அடுத்து வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள்  நிரந்தர நியமனம் வழங்கப்படுமென சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சு இதற்கான துரித வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் சமுர்த்தி அதிகாரிகள் எதிர்காலத்தில் ஓய்வூதியத்துக்கு உரித்துடையவர்களாக உள்வாங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை ஒழுங்கு முறையில் பெற்றுக் கொள்ள தேவையான திட்டமும் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலுவூட்டல் அமைச்சில் நேற்று (07)  நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment