விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் – சட்ட மா அதிபர்

254 0

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்தினை தெரிவித்ததன்  மூலம் அவர், குற்றவியல் சட்டத்தின் 120 ஆம் சரத்துக்கு அமைவாக குற்றம் இழைத்துள்ளார் எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு எனவும் சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் 157 ஆவது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும் அது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment