சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 07 ஆண்டு சிறைத்தண்டனை

5624 0
இளவயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயொகம் செய்த குற்றவாளியான 68 வயதுடைய ஒருவருக்கு கடுமையான உழைப்புடன் 07 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தவிர குற்றவாளிக்கு எதிராக 10,000 ருபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 07 வயதுடைய சிறுமியை துஷ்பியோகம் செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் பிரதிவாதி குற்றவாளியாக இனங்காணப்பட்டதால கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Leave a comment