கடலில் மிதந்து வந்த பழமையான பிள்ளையார் சிலை

296 0

சிலாபம், கருக்குப்பனை பகுதி கடலில் மிதந்தபடி வந்த பழமையான பிள்ளையார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கடலில் மிதந்து வந்த நிலையில் குறித்த விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மரத்தினால் செதுக்கப்பட்ட இவ்விக்கிரகம் இடது கரம் உடைந்த நிலையில் கடற் பாசிகள் படிந்தவாறு காணப்படுகிறது.

சிலையை கண்டெடுத்தவர் தற்போது அவர் வீட்டிலே சிலையை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment