ராஜபக்ஷ குழுவினர் தமக்கான சவக்குழியை தாமே தோண்டி கொண்டுள்ளனர் : சாகல

246 0

கொழும்பில் கூட்டு எதிரணியினர் நடத்திய போராட்டம் புஷ்வாணமாகிவிட்டது. ராஜபக்ஷ குழுவினர் தமக்கான சவக்குழியை தாமே தோண்டி கொண்டனர். 

போராட்டம் தோல்வி கண்டமையினால் கூட்டு எதிரணியினரின் செயற்பாடுகள் அனைத்தும் நகைச்சுவையாக மாறியுள்ளது, என செயற்திட்ட முகாமையாளர், இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கூட்டு எதிரணியினர் தற்போது தாம் செய்த நிதி மோசடிகளுக்கு நஷ்டஈடு செலுத்தும் நோக்கில் விசேட நீதிமன்றத்துக்கு முகங்கொடுகக தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்து அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment