ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சுதந்திரம் வழங்குகிறோம் -ரணில்

204 0

கொழும்புக்கு வருகை தரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சுதந்திரமாக வரலாம் எனவும் அவர்களை கொழும்புக்கு வருவதற்கு எந்தவித தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் இணையத்தளத்தில் பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்கள் இடையூறுகளை சந்திக்கக் கூடாது எனவும் பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a comment