பாராளுமன்றம் ஒத்திவைப்பு

656 0

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இடம்பெற்ற கடுமையான விவாதத்தை அடுத்து பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்து, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனை அடுத்தே, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment