சென்னைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம்!

407 0

மாம்பலத்தில் உள்ள தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் பிணமாக கிடந்தார். அவரது மர்மசாவு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் லிண்டா இரானா(வயது 24). இவர் சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர் சென்னை மாம்பலத்தில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு இருந்து பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் தங்கியிருந்த அறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் மர்மமான முறையில் இறந்து பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே விஷ பாட்டில் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment