என்னிடம் கோரினால் க்ளைபோசேட்டை நிறுத்துவேன்- அமைச்சர் நவீன்

4308 0

சுகாதார அமைச்சின் ஊடாகவோ அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாகவோ க்ளைபோசேட் இராசாயனத்தை நிறுத்தமாறு என்னிடம் கோரினால் அதனை நிறுத்தவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் இதனை தெரிவித்தார்.

பொருந்தோட்ட கைதொழில் அமைச்சர் என்ற ரீதியில் தம்மால் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனின் வாழ்க்கைக்கு க்ளைபோசேட் எனும் இராசாயனம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்ற ஆய்வு அறிக்கையும் தமக்கு சமர்பிக்கபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment