வண்டி மாட்டினை வெட்டி விற்ற ஒருவர் கைது

257 0

மாட்டுவண்டி சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் பொரிஸார் தெரிவிக்கின்றனர்.

வடமாகாணத்தில் மாட்டுவண்டி சவாரி பாரம்பரிய விளையாட்டாக பேணப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது,

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மாட்டுவண்டி சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த மாட்டிறைச்சியும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றுமொருவர் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பொது மக்களின் மாடுகள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமான முறையில் இறைச்சிகளாக்கப்படுவதும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment