அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் -ஆனந்தசங்கரி

273 0

அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியே இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பானது கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வரலாற்று நிகழ்வாக நோக்கப்படுகிறது.

Leave a comment