2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

260 0

வவுனியாவில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் வவுனியாவில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியாவில் இருந்து கெப்பித்திகொல்லாவ பகுதிக்கு கேரள கஞ்சாவுடன் பேருந்தில் பயணிக்கும் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், கெப்பித்திகொல்லாவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று (22) முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment