முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவ திட்டம்-சமரவீர

252 0

முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான வரைவு தீர்வுத் திட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி கலாச்சரத்தை எப்போதும் அரசாங்கத்தினால் மாற்ற முடியாது எனவும் அதற்கான ஒரு வரையரையை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான பாரிய வேலைத்திட்டம் ஒன்று போக்குவரத்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment