அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் – சபாநாயகர்

228 0

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வேறுபாடுகள் இருப்பின் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் ஜப்பான் மற்றும் இலங்கை நாணயங்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் கடந்திருப்பினும் இறந்த காலத்தை உற்று நோக்கும் போது நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் இனங்களுக்கும் பல்வேறு குழுக்களுக்கும் இடையில் காணப்பட்ட முறண்பாடுகளால் பயங்கரமான யுத்தத்தை சந்திக்க நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இறந்த காலத்தை உற்று நோக்கி அப்போது ஏற்பட்ட தவறுகளை இனங்கண்டு எதிர்கால சந்ததியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment