சைட்டம் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

280 0

சைட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம்  ஜனாதிபதியிடம் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

மாலபே சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்துக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி ஒரு மாதத்தை அடையவுள்ள நிலையிலும் அம்மாணவர்களை அம்மருத்துவ பீடத்தில் உள்வாங்காமல் கால இழுத்தடிப்பு செய்துவருவதாக   தெரிவித்தே இம்முறைப்பாட்டை அச்சங்கம் கையளித்துள்ளது.

சைட்டம் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கடந்த மாதம் 7 ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது. இது தொடர்பிலான சட்ட மூலத்துக்கு பாராளுமன்றத்திலும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment