சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா

308 0

01வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியை திருமதி சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா நாளை (17) மாலை 4.30 மணிக்கு வட்டு. யாழ்ப்பாணக்கல்லூரியின் ஒட்லி மண்டபத்தில் நடைபெறும்.

யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் கலாநிதி டி.எஸ் சொலமன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் நிகழ்வின் பிரதவிருந்தினராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா கலந்து கொண்டு ஆசியுரை வழங்கவுள்ளார்.

வெளியீட்டுரையினை ஊடகவியாலாளரும் கவிஞருமான செல்வக்குமார் ஆற்றவுள்ளார். மதிப்பீட்டுரையினை கவிஞர் கை. சரவணன் ஆற்றவுள்ளார்.

இக் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

01