பிரதமர் ரணில் நாளை யாழ்.விஜயம்

356 0

ranil-wicநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள அவர் யாழ்.மாவட்டச் செயலகத்தின் வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக கட்டத் தொகுதியினை உத்தியோக திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இக் கலந்துரையாடலுக்காக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், பிரதேச செயலர்கள், அரச திணைக்கள தலைவர்கள் ஆகியோரையும் அழைத்துக் கலந்துரையாடவுள்ளார்.