கல்ஹின்னை பிரதேச முஸ்லிம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு!

311 0

capture-3-1கல்கிசைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்மீது சற்று நேரத்திற்கு முன்னர் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் பள்ளிவாசல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்ட நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதல் குறித்து காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் வாதிகளும் ஆராய்ந்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.